2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிந்தவூரில் தொடர் கடலரிப்பு; மீனவர்கள் அங்கலாய்ப்பு

பைஷல் இஸ்மாயில்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, நிந்தவூர் பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட  வவ்வாளோடை பகுதியில் கடந்த ஓரிரு நாட்களாக ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்புக் காரணமாக, இந்தப் பகுதி கடலை அண்டிய பகுதிகள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் மீன்பிடி வாடிகளும் தென்னை மரங்களும், கடல் நீரால் காவுகொள்ளப்பட்டுள்ளன.  

இதனால் தங்களது அன்றாட மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு இரவுப் பொழுதிலும் நிம்மதியின்றி தாங்கள் உறங்குவதாகவும் எந்நேரத்தில் தமது உடமைகள் கடல் நீரால் காவுகொள்ளப்படும் என்பது பற்றி மிகவும் கவலையாக உள்ளதாகவும், இப்பகுதி மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர். 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், குறித்த பகுதிக்கு இன்று (02) திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடலரிப்பால் மீனவர்கள்  படும் துயரங்களைக் கேட்டறிந்த அவர், கடலரிப்பைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாகக் கூறி, அதுதொடர்பான அதிகாரிகளை தொடர்புகொண்டு, அதற்கான வேலைகளையும் முன்னெடுத்தார்.

இதன் முதற்கட்டமாக, மண் நிரப்பப்பட்ட பேக்குகளை கடலோரங்களில் பதிப்பதாகவும், இது சாத்தியமாகாத பட்சத்தில் கடலரிப்பைத் தடுக்க நிலையான நடவடிக்கைள் எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர்  பைசால் காசிம் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .