2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு'

Niroshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அங்கத்துவ வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இன்று (13) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பிரகாரம் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்தல், வட்டார மட்டத்தில் கிளைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களையும் தெரிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவை யாவும் தனது மேற்பார்வையின் கீழ் தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் இந்த அங்கத்துவ வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீதும் கல்முனைத் தொகுதியில் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் சம்மாந்துறை தொகுதியில் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மாயில் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கீழ் அங்கத்துவ வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.

இவ்வங்கத்துவ வார நிகழ்வுகளின் இறுதியாக பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களுக்கான நிர்வாகிகள் தெரிவு, கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இடம்பெறவுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .