2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

17,566 வாக்களர்களுக்கு 15 வாக்களிப்பு நிலையங்கள்

வி.சுகிர்தகுமார்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரங்கள் நேற்று (07) நள்ளிரவுடன் நிறைவுற்ற நிலையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசம் அமைதியாகக் காணப்படுகின்றது.

10 வட்டாரங்களை உள்ளடக்கிய இப்பிரதேச சபைக்காக நான்கு கட்சிகளின் சார்பாக 64 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதுடன், 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் 17,566 வாக்களர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 15 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 10 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகளும் இடம்பெறவுள்ளதாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் பிரதேச தெரிவத்தாட்சி அலுவலருமான வி.ஜெகதீசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .