2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் சுகயீன வேலைநிறுத்த போராட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் தங்களது பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றைக் கோரி சுகயீனப் போராட்டத்தை நடத்தினர்.

இப்போராட்டத்தின் அங்கமாக கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை  மற்றும்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெற்றது.    இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் செயலிழந்ததோடு நோயாளிகளும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இதேவேளை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த வெளிநோயாளர்கள்  திருப்பி அனுப்பப்பட்டதால், மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .