2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'அரசியலில் நுழைய ஆசைப்பட்டதில்லை’

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் நுழைய நான் என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்காக வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். 

அதன்படி இன்று (24) பிரதமர் மோடி பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசினார். இந்திய நாட்டின் கலாசாரம், மொழி குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், மொழியின் சிறப்பு குறித்து விளக்குவதற்காக மகாகவி பாரதியின் பாடலை பாடி மேற்கோள் காட்டினார். 

அத்துடன், அதில் தனது அரசியல் வாழ்க்கை குறித்தும் சில கருத்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே இல்லை. ஆனால் நான் தற்போது அரசியலில் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்காக நான் நன்றாக பணியாற்றி இருக்கேன்” எனத் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .