2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிபொருள் துறைக்கு கடும் நெருக்கடி: தர்மேந்திர பிரதான் கவலை

A.K.M. Ramzy   / 2020 ஜூன் 29 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

 நாட்டில் எரிபொருள் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது என மத்திய பெற்றோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் பெற்றோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாள்களாக உயர்த்தப்பட்டு வருகிறது.

பெற்றோல், டீசல் விலையை கடந்த 7ஆம் திகதியிலிருந்து 22ஆவது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளன.

இதன்படி பெற்றோல் லீற்றருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெற்றோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெற்றோல் லீற்றருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லீற்றருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.80.38 பைசாவிலிருந்து, ரூ.80.43 பைசாவாக அதிகரி்த்துள்ளது.

டீசல் ஒரு லீற்றர் ரூ.80.40 பைசாவிலிருந்து ரூ.80.53 பைசாவாக உயர்ந்துள்ளது.

மும்பையில் பெற்றோல் லீற்றர் ரூ.87.14 பைசாவிலிருந்து ரூ.87.19 ஆகவும், டீசல் ரூ.78.71 லிருந்து ரூ.78.83 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெற்றோல் விலை இன்றைய நிலவரப்படி லீற்றர்  ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லீற்றர் ரூ.77.72 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

நாடுமுழுவதும் பெற்றோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாள்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப் பட்டது.

இந்தநிலையில் மத்திய பெற்றோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

உலக பொருளாதாரமே தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்திய பொருளாதாரமும் பெரும் சவால் களை சந்தித்து வருகிறது.

பெற்றோல் மற்றும் டீசல் தேவை கடந்த ஏப்ரல் முதல் மே மாதங்களில் 70 முதல் 80 சதவீதம் வரை குறைந்துபோனது.

இதனால் நமது பொருளாதாரமும் கடும் நெருக்கடியை சந்திக்கிறது.

இதனால் நமது நாட்டில் எரிபொருள் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது’’ எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .