2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (10.02.2013)

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (10.02.2013)



மேடம்
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைக்கும். மேலும் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறக்கும். லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம்
உறவினர் மற்றும் நண்பர்கள் வருகை இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும் செலவுகள் அதிகமாகும். மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: தொடர்புகள்


கடகம்
உண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். வீணான மருத்துவ செலவுகள்  காணப்படும்.  இதனால் உடல் நலம் பாதிப்படையும் . எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
புனர்பூசம்: துன்பம் 
பூசம்: துக்கம்
ஆயில்யம்: வெறுப்பு


சிம்மம்
அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ம் பாதம்: மகிழ்ச்சி


கன்னி
வேண்டாதவர்களுடைய நட்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நஷ்;டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்


துலாம்
பொன் பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு


விருட்சிகம்
வேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். தீயவர்களின் நட்புக்களை தவிர்ப்பது அவசியம்.
விசாகம் 4ஆம் பாதம்: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நடஷ்டம்


தனுசு
செய்யும் செயல்களில் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில்  தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்


மகரம்
பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்.  மற்றவர்களினால் பிரச்சனைகள் காணப்படும். துன்பங்களை அடைய நேரிடும். எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: துன்பம் 
அவிட்டம் 1, 2: துக்கம்


கும்பம்
மகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும்.  இதனால் லாபமும் மகிழ்ச்சியும் கிட்டும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்


மீனம்
செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்பட்டு காரியங்கள் தடைபடும். திருட்டு பயம் வீண் அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: தடை
ரேவதி: துன்பம்    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X