2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (15.07.2011)

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.07.2011)
 
இன்று கர வருடம் ஆனி மாதம் 30ஆம் நாள் (15.07.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் பௌர்ணமி திதியும் பூராடம் நட்சத்திரம் காலை 09.53 மணிவரை பின்பு உத்திராடம்.

இராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணி.வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணிவரை. இரவு 09.00 முதல் இரவு 10.30 மணிவரை.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 மணிவரை. மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.


மேஷம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
அஸ்வினி: சுகவீனம்
பரணி: விரயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தடை


இடபம்
விசித்திரமான பொருள் காணகிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.    
கிருத்திகை 2,3,4: பகை
ரோகிணி: நிதானம்
மிருகசீரிடம் 1,2: ஆச்சரியம்


மிதுனம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், தூரப்பிரயாணங்கள் செல்ல நேரிடும், புதிய தொடர்புகள் தேடி வருதல்.
மிருகசீரிடம் 2,3: வாய்ப்பு
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: அனுகூலம்


கடகம்
நவீன சாதனைகளை முன்னெடுப்பதனால் நன்மை, பவைர்களினால் சிறு சிக்கல்கள் ஏற்படும், பணவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: சேமிப்பு
பூசம்: இடையூறுகள்
ஆயில்யம்: தொடர்புகள்


சிம்மம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், அலைச்சல்கள் அதிகரிக்கும், புதிய வேலைத் திட்டங்கள் நட்டத்தை ஏற்படுத்தும்.
மகம்: கவலை
பூரம்: தோழ்வி
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்


கன்னி  
பெண்கள் தமது கடமையைச் சரிவர செய்தல், மேல் அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திரம் 2,3,4: நன்மை
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1,2ஆம் பாதம்: நிதானம்


துலாம்
சுற்றுலாப் பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: உற்சாகம்
சுவாதி: மனநிறைவு
விசாகம் 1,2,3: ஆசீர்வாதம்


விருட்சிகம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், மேல் அதிகாரிகளுடன் சுமூகமாகச் செயற்படவும்.
விசாகம் 4: நலன் பாதிப்பு
அனுஷம்: பின்னடைவு
கேட்டை: சங்கடம்


தனுசு
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: சோர்வு
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அவதானம்


மகரம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
உத்திராடம் 2,3,4: குடும்ப ஒற்றுமை
திருவோணம்: முன்னேற்றம்
அவிட்டம் 1,2: ஆகாரம்


கும்பம்
தூரப் பிரயாணங்கள் செல்வதானல் மன அமைதி, நவீன வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.
அவிட்டம் 3,4: அனுகூலம்
சதயம்: ஆதரவு
பூரட்டாதி 1,2,3: சந்தோஷம்


மீனம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.
பூரட்டாதி 4: மேன்மை
உத்திரட்டாதி: ஆசீர்வாதம்
ரேவதி: பயம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .