2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (19.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (19.11.2011)

இன்று கர வருடம் ஐப்பசி மாதம் 03ஆம் நாள் (19.11.2011) சனிக்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் நவமி திதியும் மகம் நட்சத்திரம் மாலை 01.05 மணிவரை, பின்பு பூரம்.
இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.



மேடம்
விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் மனக் கசப்புக்கள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதால் துன்பம்.
அஸ்வினி: பகை
பரணி: வாக்குவாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆச்சரியம்


இடபம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும்;, குடும்பத்தில் பெண்களினால் மகிழ்சியும் அனுகூலமும் உண்டாகும், புதிய செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
ரோகிணி: ஆரோக்கியம்
மிருகசீரிடம் 1, 2: தகவல்


மிதுனம்
தீயவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: குழப்பம்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நாவடக்கம்


கடகம்
பிறரின் மூலம் செய்திகள் கிடைக்கும், புதிய சாதனைகளை முன்னெடுப்பதனால் நன்மை, பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: நல்ல செய்தி
பூசம்: முயற்சி
ஆயில்யம்: காலதாமதம்


சிம்மம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், காணாமல் போன பொருள் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
மகம்: மனஸ்தாபம்
பூரம்: உபாதைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் முன்னேற்றம், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படுதல்.
உத்திரம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உயர்வு


துலாம்
சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படுதல், அஜீரண கோளாறுகள் ஏற்படும், தொழில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விருப்பமின்மை
சுவாதி: சுகயீனம்
விசாகம் 1, 2, 3: மந்தநிலை


விருட்சிகம்
பணப் பிரச்சினைகள் ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: நஷ்டம்
அனுசம்: உதவி
கேட்டை: நற்செய்தி


தனுசு
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், அனாவசிய பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்கவும்.
மூலம்: சிரமம்
பூராடம்: கவலை
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை


மகரம்
பொன், பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயற்படல், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: ஒற்றுமை
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: வாய்ப்பு


கும்பம்
திருட்டுக்கள் ஏற்பட கூடும், பகைவர்களினால் சிறு தொல்லைகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: தடைகள்
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: பயம்


மீனம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், அலைச்சல்கள் அதிகரித்தல்.
பூரட்டாதி 4: தேகசும்
உத்திரட்டாதி: களைப்பு
ரேவதி: துன்பம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X