2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றை பலன்கள் (25.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றை பலன்கள் (25.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 08ஆம் நாள் (25.09.2011) ஞாயிற்றுக்கிழமை. மரண மேல் சித்த யோகமும் திரயோதசி திதியும் மகம் நட்சத்திரம் மாலை 09.06 மணிவரை பின்பு பூரம்.
 

ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணி வரை.
நல்ல நேரம்: காலை 6.15 முதல்0 காலை 7.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.




மேடம்
உரிய பணவரவு கிடைத்தல், பிறரின் மூலம் உதவிகள் தேடி வருதல், அயல் தேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.

அஸ்வினி: உதவி
பரணி: வரவு
கிருத்திகை 1ஆம் பாதம்: தகவல்



இடபம்
அரசாங்க ஊழியர்களின் சலுகை கிடைக்கும், தூய்மையான ஆடை அணிதல், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும்.

கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: மனத் தெளிவு
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஆதாயம்



மிதுனம்
அறுசுவையான உணவு உண்ணலாம், பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சியை தரும், புதிய வேலைத்திட்டங்கள் மேன்மை பெறும்.

மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: வெற்றி
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம:; ஆகாரம்



கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், சாதுக்களின் தரிசனம் கிடைத்தல்.

புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: ஆசீர்வாதம்
ஆயில்யம்: மனஅமைதி



சிம்மம்
பணத் தட்டுபாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தும், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

மகம்: நோய்கள்
பூரம்: நட்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு



கன்னி
செலவுகள் சற்று அதிகரித்தல், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும்.

உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: விரயம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தோல்வி



துலாம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, மேல் அதிகாரிகளுடன்
பொறுமையுடன் செயற்படவும், புதிய செய்திகள் கிடைக்கும்.

சித்திரை 3, 4ஆம் பாதம்: நிதானம்
சுவாதி: நல்லசெய்தி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: குதூகலம்



விருட்சிகம்
மனதில் சிறு குழப்பங்கள் தோன்றும், பொழுதுபோக்குகளில் அதிக நாட்டம்
காட்டல், பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம்.

விசாகம் 4ஆம் பாதம்: ஆர்வம்
அனுசம்: சோர்வு
கேட்டை: நன்மை



தனுசு
பிறரின் உதவிகளை நாடுதல், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, நவீன
சாதனைகளினால் மேன்மை அடையலாம்.

மூலம்: புதய நுட்பங்கள்
பூராடம்: ஆதாயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உழைப்பு



மகரம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, மனதில் பயம் உணர்வு ஏற்படும், சரும
நோய்கள் வந்து நீங்கும்.

உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம் : நலன் பாதிப்பு
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: துக்கம்



கும்பம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், நெருங்கி நண்பர்கள் தேடி வருதல், அயல் தேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.

அவிட்டம் 3, 4ஆம் பாதம்: நட்பு
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: தகவல்



மீனம்
புதிய வேலைப் பணிகளை நடைமுறைபடுத்தல், சுவையான உணவு கிடைக்கும், பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பூரட்டாதி 4ஆம் பாதம்: நன்மை
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: அனுசரிப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .