2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (29.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (29.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 12ஆம் நாள் (29.09.2011) வியாழக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் துவிதியை திதியும் சித்திரை நட்சத்திரம் மாலை 03.02 மணிவரை, பின்பு  சுவாதி.
இராகு காலம் : காலை 01.30 முதல் 03.00 மணிவரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை

வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 10.45 - 11.45 மணிவரை, 12.15 முதல் 1.15 மணிவரை.



மேடம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் சாதகமாக அமையும், அழகிய ஆடை, அணிகலன்கள் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல்.
அஸ்வினி: நட்பு
பரணி: ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு அதிகரிக்கும், புதிய வேலைப் பணிகளை செயல்படுத்தல், இசையில் ஈடுபாடு அதிகரித்தல்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: திட்டங்கள்
ரோகிணி: ஆர்வம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: அக்கறை


மிதுனம்
நீண்டநாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும், பிறரின் உதவியை நாடுதல், புதிய திட்டங்களினால் அதிக லாபம்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: தகவல்
திருவாதிரை: சலுகை
புனர்பூசம்: அதிர்ஷ்டம்


கடகம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், திருடர்களிடம் கவனம் தேவை, அனாவசிய பேச்சுக்களினால் கவலை.
புனர்பூசம்: அவதானம்
பூசம்: செலவு
ஆயில்யம்: சங்கடம்


சிம்மம்
நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபடுதல், தனலாபம் ஏற்படும், வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுவதால் அனுகூலம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: தொடர்பு


கன்னி 
அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும், மனதில் சிறு குழப்பங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: கவலை
அஸ்தம்: சகிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனபதற்றம்


துலாம்
பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், புதிய வேலைகள் அலைச்சலை ஏற்படுத்தும், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தாமதம்
சுவாதி: உபகாரம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: அலைச்சல்


விருட்சிகம்
பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள்; ஏற்படும், சரும நோய்கள் வந்து நீங்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
விசாகம் 4ஆம் பாதம்: கலக்கம்
அனுசம்: உபாதைகள்
கேட்டை: வாக்குவாதம்


தனுசு
தொழிலில் நவீன வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
மூலம்: வரவு
பூராடம்: ஒத்துழைப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: நட்பு


மகரம்
புதிய காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், துஷ்டர்களின் சகவாசங்களினால் பிரச்சினை ஏற்படுத்தும், அதிக செலவுகளை மேற்கொள்தல்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: விரயம்
திருவோணம்: தீயநட்பு
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: தோல்வி


கும்பம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், அலைச்சல்கள் அதிகரிக்கும், புதிய தொடர்புகளின் மூலம் மேன்மை அடையலாம்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
சதயம்: சிரமம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: முன்னேற்றம்


மீனம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், திருடர்களிடம் கவனம் தேவை, தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: பகை
உத்திரட்டாதி: செலவு
ரேவதி: பயம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .