2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (27.05.2020) முன்னேற்றம் உண்டு!

Editorial   / 2020 மே 27 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க நேரும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நாள். பயமின்றி முழு முயற்சி செய்து முன்னேறுங்கள்.

ரிஷபம்: எதிலும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்: எதிர்பார்த்த பணவரவுகள் தாமதப்படும். உறவுகளோடு வீண் வாதங்களைத் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை.

கன்னி: எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி பணிபுரியும் இடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.

மகரம்: எதிர்பார்ப்புக்கும் மேலான அதிக தனவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். இனிய பேச்சால் எதிரியையும் வசமாக்குவர். வாகனயோகமும், சிறுதூரப் பயணங்களும் மகிழ்ச்சி தரும்.

கடகம்: தொழில், வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்ந்திடுவீர்கள். பல வழிகளிலும் வருமானங்கள் சீராக உயரும். அரசியல் ஆதாயங்கள் ஏற்படும்.

சிம்மம்: தொழிலில் முதலீடுகளைக் குறைப்பது நல்லது. தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றமும், பணமுடையும் ஏற்படலாம்.

துலாம்: உங்கள் தீவிர முயற்சியால் தனவரவு அதிகரிக்கும். அரசு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். நேர்மையுடன் தொழில் செய்தால் அதிக இலாபம் காணலாம்.

மீனம்: மனச் சோர்வும், உடற்சோர்வு ஏற்படும். பயணங்களில் தடைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். என்னதான் கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது.

தனுசு: கோபத்தைக் குறைத்து, நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், வீட்டில் குழப்பங்கள் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். இறையருளால், வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: விரும்பிய பொருட்கள் வீடுவந்து சேரும்.எல்லா வளமும் பெருகும். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X