2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானில் கார்க் குண்டு தாக்குதல்;19பேர் பலி

Super User   / 2010 மே 18 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நோட்டோ படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தத் தாக்குதலில் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காபூலிலுள்ள தருலமன் எனும் இடத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் மற்றுமொரு அரசாங்க கட்டிடத்திற்கும் அருகிலேயே மேற்படி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.

இந்த கார்க் குண்டுத் தாக்குதலையடுத்து, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பலத்த கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், இதுவொரு துரோகச் செயலெனவும் குறிப்பிட்டார்.


 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X