2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈராக்கில் இடம்பெற்ற குண்டு தாக்குதல், துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி;350 பேர் காயம்

Super User   / 2010 மே 11 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் 350 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் மத்திய நகரான ஹில்லா எனும் இடத்திலுள்ள ஆடைக் கைத்தொழிற்சாலையில் இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை 140 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பக்தாத்தின் சுவய்ர எனும் இடத்தில் அமைந்துள்ள சன நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, 40க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

பஸறாப் பகுதியில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதல்களில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, 12க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பலுஜா நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பொலிஸ் உத்தியோகர்த்தர் மற்றும் அவரது பாரியார் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.





 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .