2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல் 28 யாத்திரிகர்கள் பலி; 45 பேர் காயம்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தபட்சம் 28 பேர் பலியானதுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் பக்தாத்தின் வடபகுதியில் ஷியா யாத்திரிகள் பள்ளிவாசல் ஒன்றை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு பாலமொன்றில்  யாத்திரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதன்கிழமை தாக்குதலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X