2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.எஸ் தளபதி ஒமர் சேச்சென்னின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், ஐக்கிய அமெரிக்காவின் வான்தாக்குதலில் காயமடைந்த, முன்னாள் சோவியத் யூனிய போராளிகளிடையே பிரபலமான முன்னணி ஐ.எஸ்.ஐ.எஸ் தளபதியான ஒமர் அல்-ஷிஷனி காயம் காரணமாக மரணமடைந்துள்ளதாக மூத்த ஈராக்கிய அதிகாரி ஒருவரும் சிரிய ஆர்வலர் குழுவொன்றும் தெரிவித்துள்ளது.

தர்கான் படிரஷ்விலி என்ற இயற் பெயரைக் கொண்ட ஷிஷனி, கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்திருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் பலம் வாய்ந்த இடமான சிரியாவில் றக்காவில் இவ்வாரம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை, ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பேச்சாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் ஷிஷனியின் தந்தையான டெய்முராஸ் படிரஷ்விலி, மேற்படித் தகவல் பிழையானது எனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .