2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிர்கிஸ்தானில் இனக்கலவரம்;10,000 உஸ்பெக்ஸ் மக்கள் இடம்பெயர்வு

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் இனக்கலவரம்  காரணமாக பத்தாயிரக்கணக்கான உஸ்பெக்ஸ் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்படி வன்முறைச் சம்பவங்களில் இதுவரையில் 114 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, 1,458 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் இனக்கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக, அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்கு சுட்டுக்கொல்லும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி குர்மன் பெக் பகியெவ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, இடம்பெறும் மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X