2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனாவில் மண்சரிவு;100 பொதுமக்கள் புதையுண்டனர்

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஏற்பட்டிருக்கும் மண்சரிவில் அகப்பட்டு சுமார் 100 பொதுமக்கள் புதையுண்டு போயுள்ளனர்.

சீனாவின் தென் மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்திருந்ததினால், சீனாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக, 235 பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் அதேவேளை, 199 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், 2.4 மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

எனினும், இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம்  என்றும் அஞ்சப்படுகிறது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X