2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தென்னிந்தியாவில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் 160 பேர் பலி

Super User   / 2010 மே 22 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விமான விபத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி விமானம் இந்திய கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.  குறித்த விமானம் விபத்துக்கு உள்ளானபோது தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டுபாயிலிருந்து புறப்பட்டு வந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தில் 163 பயணிகளும், 9 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, இந்த விமான விபத்தில் 160 பொதுமக்கள் உயிரிழந்தமையை கர்நாடக உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மங்களூரில் இடம்பெற்ற விமான விபத்தில் 160 பேர் உயிரிழந்தமை தொடர்பில் கேள்விப்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி  மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X