2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாய்லாந்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் தளர்வு

Super User   / 2010 மே 31 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் கடந்த சில நாள்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை காணப்படுவதாகவும், இதனால், ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துவதாகவும் தாய்லாந்துப் பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா  அறிவித்துள்ளார்.

தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தாய்லாந்து இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதை அடுத்து, தாய்லாந்து தலைநகர் பாங்கொக் மற்றும் ஏனைய 23 மாகாணங்களிலும் கடந்த 19ஆம் திகதி முதல்  ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மேற்படி மோதலில் இதுவரையில் சுமார் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை,  400 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் தற்போது பதவி வகிக்கும்  அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி  செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்து உடனடியாக பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அதிகாரிகளிடமும்,  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இதனை தாய்லாந்து அதிகாரிகள்  நிராகரித்திருந்தனர்.

இது இவ்வாறிருக்க, தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறும்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் வலியுறுத்தியிருந்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .