2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாய்லாந்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா வலியுறுத்தல்

Super User   / 2010 மே 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன்,  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

கடந்த 5 நாள்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் நவநீதம்பிள்ளை  தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், உயிரிழப்புக்களை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பேச்சுவார்த்தைக்கு முன்னராக பாங்கொக்கில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என தாய்லாந்து நாட்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்கார்கள் கடந்த 2 மாதங்களாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X