2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலாந்து நாட்டு ஜனாதிபதியின் இறுதிச்சடங்கில் அமெ. ஜனாதிபதி பராக் ஒபமா கலந்துகொள்ளவுள்ளார்

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான விபத்தில் உயிரிழந்த போலாந்து நாட்டு ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போலாந்து நாட்டுக்கு செல்லவுள்ளார்.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களும் போலாந்து நாட்டு ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் காசியன்ஸிகி கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த விமான விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இதேவேளை, போலாந்து நாட்டில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருப்பதாக அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .