2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யேமன் பிரதமர் மீது றொக்கட் தாக்குதல்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் ஏடன் நகரில், பிரதமர் காலித் பஹாஹ், அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது வதிவிடங்களாகப் பயன்படுத்திவந்த ஹொட்டல் ஒன்றின் மீது றொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கட்டடத்தின் மீது மூன்று றொக்கட்கள் வீழ்ந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இத்தாக்குதலின்போது பிரதமருக்குப் பாதிப்பேதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் பாதிப்பேதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தத் தாக்குதலில் அரபுக் கூட்டணியையும் அதன் யேமன் கூட்டணியையும் சேர்ந்த 15 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஹொட்டலில் இருந்து பாரிய புகை எழுவதாக தெரிவிக்கப்பட்டதோடு, பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஏனையோரும் உடனடியாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.

யேமன் அரசாங்கத்துக்கெதிராகப் போராடிவரும் ஹூதி போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்த ஏடன், கடந்த ஜூலையில் மீளக் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தற்காலிகத் தலைநகராகச் செயற்பட்டு வருகின்றது. இதனால், பிரதமரும் அமைச்சர்களும் அங்கேயே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .