2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரஷ்யாவில் தற்கொலை தாக்குதல்;12 பேர் பலி

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் வடபகுதியில் இன்று  இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் உயர் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 20 நிமிடங்களின் பின்னர் இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல்களையடுத்து, ரஷ்யாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .