2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 20 பேர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ள மிகவும் சக்திவாய்ந்த  குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாக  அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சன நடமாட்டம் அதிகமுள்ள  பழங்கள் மற்றும் மரக்கறிகள் விற்பனை செய்யும் சந்தையிலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரயில் மீது தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை (08) மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம்  13 பேர் கொல்லப்பட்டதுடன், 37 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ராவல்பிண்டி நோக்கி செல்வதற்காக வந்த ஜபார் எக்பிரஸ் மீது ஷிபி ரயில் நிலையத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X