2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஈராக் குண்டுத் தாக்குதல்களில் 15 பேர் பலி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கில் இன்று புதன்கிழமை இடம்;பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 12இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய நகரான ஹிலாவில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் உணவு விடுதிக்கு அருகில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஓகஸ்ட் மாதத்தில் 45 பொலிஸாரும் 39 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக ஈராக் நாட்டு உள்நாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கணக்கெடுப்புத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 14 September 2011 11:47 PM

    அமெரிக்க படைவீரர்கள் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க, பலியாவோரின் வரைபு ஏறிக்கொண்டே போகும்போல?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .