Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைபர் பிராந்தியத்தின் லக்கி மார்வட் நகரிலுள்ள பொலிஸ் நிலையமொன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காரில் வந்த தற்கொலைதாரி பொலிஸ் நிலையத்தினுள் காரை செலுத்தியுள்ளார் என்று பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 11 பொலிஸார், 4 பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் அடங்குவர். இச்சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் லாகூர் மற்றும் குவேட்டா நகரங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கின்போது தணிந்திருந்த வன்முறைகள் அத்தாக்குதல்களின் மூலம் மீண்டும் தீவிரமாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago