2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரஷ்ய விமான விபத்தில் நால்வர் பலி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஓடுபாதையை விட்டு விலகிய பயணிகள் விமானம் பல துண்டுகளாக பிரிந்து, தீப்பற்றியதாலேயே அதில் பயணித்த எட்டுபேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெருமளவான பயணிகளுடன் வந்திறங்கிய குறித்த விமானம், மீண்டும் பயணிகள் இன்றி விமான ஊழியர்களுடன் பறக்க முற்பட்ட வேளையிலேயே இப்பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .