2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற இரு கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 100ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் கரம் அல் லூல் பிராந்தியத்தில் அதிக மக்கள் குடியிருப்புகள் உள்ள வீதியில் இந்த இரு கார் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகளவில் அடங்குவதாக ஏ.எவ்.பி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆஷாத்துககு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சிகளில் 150,000 ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏனைய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .