2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பப்புவா நியூகினியாவில் விமான விபத்து; 28 பேர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை  தெரிவித்தனர். சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காட்டுப்பிரதேசமொன்றில் நேற்று  இந்த விமானம் வீழ்ந்ததாகவும் விமானத்திலிருந்த நால்வர் உயிர் தப்பியுள்ளதாகவும் மேற்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த விமானிகள் இருவரும் உயிர் தப்பியவர்களில் அடங்குவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் தெரிவித்தது.

லாயே நகரிலிருந்து சுற்றுலா பிரதேசமான மாடாங் நோக்கிச் சென்ற பப்புவா நியூகினியாவின் பி.என்.ஜி. விமானசேவைக்கு சொந்தமான டேஷ் 8 ரக விமானமொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .