2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 6 பேர் பலி

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலம்பியாவில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.

கொலம்பிய துறைமுக நகரான புயன வெந்துராவில் மேயரின் அலுவலகத்துக்கு அருகில் கடந்த புதன்கிழமை இந்த கார்க்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலை 'பார்க்' போராளிகளே நடத்தியதாக இராணுவத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போதைவஸ்துக் கடத்தலுக்கு பிரசித்தி மேற்படி துறைமுகப் பிராந்தியத்தில், ஆயுதக் குழுக்களுக்கும் போதைவஸ்து கடத்தல்க்காரர்களும் பலம் பெற்றுத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .