Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்ஸுவில், வீடொன்றில் நேற்று ஏற்பட்ட காரணமாக, குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் என, சீன அரச ஊடகம் தெரிவித்தது.
அம்மாகாணத்தின் சங்க்ஷு நகரத்திலுள்ள யூஷான் நகர்ப் பகுதியிலுள்ள, 2 மாடி வீடொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளது. காலை 4.30 மணியளவில், தீ ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு தீயணைப்புப் படை வீரர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்து, அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்த 22 பேருக்கு மேலதிகமாக, மூவருக்குக் காயம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்துக்காக இந்தத் தீ ஏற்பட்டது என்பது, இன்னமும் தெரிய வரவில்லை. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அந்த வீட்டில், எத்தனை பேர் வசித்தனர் என்பதுவும், இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago