2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பெனிக்னோ நொய் நொய் அகினோ பதவியேற்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பெனிக்னோ நொய் நொய் அகினோ பதவியேற்றுள்ளார்.

அந்த நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி கொன்சிதா கார்பியோ மொராலஸின் முன்னிலையில் நேற்று இவர் பதவிப் பிரமாணம் செய்தார்.

இந்நிலையில், நாட்டின் 15ஆவது ஜனாதிபதி என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில்  வெற்றி பெற்ற பெனிக்னோ அகினோ, ஊழலை ஒழிக்கவிருப்பதாக உறுதியளித்தார்.

பெனிக்னோ அகினோ படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதிபதிகளில் ஒருவருமான அகினோவின் மகனும் ஆவார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .