2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேற்குக் கரையில் புதிய சட்டரீதியற்ற குடியிருப்புகளை அறிவித்த இஸ்ரேல்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், சட்டரீதியற்ற யூதக் குடியிருப்பாளர்களுக்கான ஏறத்தாழ 800 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கின்ற நிலையில், தற்போதைய ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போலல்லாது இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கைகளை கடந்த காலத்தில் பைடன் கடந்த காலத்தில் விமர்சித்து வந்த நிலையிலேயே நேற்று  குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X