2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமாதானப் பயணத்தில் முன்னாள் முதற்பெண்மணி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான முரண்பாடுகளைக் குறைக்கும் முகமாக, தென்கொரிய முன்னாள் முதற்பெண்மணி லீ ஹீ-ஹோ, வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

'70 வருடகால கொரியப் பிரிவு காரணமாக ஏற்பட்ட வலியிலிருந்தும் காயங்களிலிருந்தும், இரண்டு கொரியாக்களும் குணமாக முடியுமெனவும், நல்லிணக்கத்தையும் இணைந்து செயற்படுதலையும் ஊக்குவிக்க முடியுமெனவும் லீ நம்பிக்கை வெளியிட்டார்' என, லீ ஹீ-ஹோ-வின் விஜயத்தை ஏற்பாடு செய்துள்ள கிம் டா-ஜ§ங் சமாதான நிலையம் தெரிவித்துள்ளது.

அவர் தனிப்பட்ட விஜயமாகவே வடகொரியாவுக்குச் சென்றுள்ள நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உட்பட உயர்மட்ட வடகொரியத் தலைவர்களை அவரால் சந்திக்க முடியுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னர், 2000ஆம் ஆண்டும் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த அப்போதைய ஜனாதிபதி டா-ஜ§ங், அதற்காக நொபெல் சமாதானப் பரிசையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X