2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29 மில்லியனைத் தாண்டியது

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 29 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், 925,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் அளவானோர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10.05 மணி வரையில் 6,534,484 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 194,147 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று காலை 9.51 மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 92,071-ஆல் உயர்ந்து 4,846,427-ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,136-ஆல் உயர்ந்து 79,722-ஆகக் காணப்படுகின்றது.

பிரேஸிலானது கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19-ஆலான 415 புதிய உயிரிழப்புகளையும், 14,768 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும் பதிவுசெய்துள்ளதாக  அந்நாட்டு சுகாதாரமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ள நிலையில், அங்கு 4,330,455 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 131,625 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .