2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜேம்ஸின் அதிரடியால் அரையிறுதிக்குள் சென்றலைட்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறிமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில் துரைராசா ஜேம்ஸ் ஜான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்றலைட்ஸ் அணி அரையிறுதிக்கு நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இதில் முதலாவது காலிறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) சென்றலைட்ஸ் அணிக்கும் ஸ்கந்தாஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 99 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்ரீ.ஸ்ரீகுமார் 38, ஜே.கதியோன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக எஸ்.வதூஸன் மற்றும் கே.கோகுலன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் என்.மயூரனன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

100 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, ஜேம்ஸ் ஜான்சனின் 45 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.டர்வின் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்கந்தா அணி சார்பாக எம்.புருசோத், எஸ்.சஞ்சயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜேம்ஸ் ஜான்சன் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X