2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ். பாடசாலை அணிகளின் 17 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டப் பாடசாலை அணிகளின் 17 வயதுப் பிரிவினர்களுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும்  ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியும் மோதிக்கொண்டன.

கடந்த திங்கட்கிழமை  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோலை மகாஜனாக் கல்லூரி பெற்றுக் கொண்டது.  ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியும் கோலாக்கி போட்டியை சமநிலைப்படுத்திய நிலையில்  முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்பட்டதுடன் புதிய உத்வேகத்துடன் இரு அணிகளும் மோதிக்கொண்டன. மீண்டும் மகாஜனாக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலைக்கு வந்தது.  ஆட்ட நிறைவில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 02க்கு 01 என்ற கோல் கணக்கில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியை வெற்றி கொண்டு இரண்டாம் சுற்றில் மாகாண ரீதியாக நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X