2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குருநாகலில் வலைப்பந்தாட்டம்:

Super User   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையில் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் வலைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அடுத்தமாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 அணிகள் பங்குபற்றவுள்ளன.

15, 17, 19 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 9 மாகாணங்களில் இருந்தும் 345 வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இருந்து 15 வயதுப் பிரிவில் வடமராட்சி இந்துக்கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அணிகளும்- 17 வயதுப்பிரிவில் தெல்லிப்பளை ஜூனியன் கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் அணிகளும்-

19 வயதுப் பிரிவில் தெல்லிப்பளை ஜூனியன் கல்லூரி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றின் அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .