2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி. நட்புறவு கால்பந்தாட்ட போட்டி

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையில் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி. பவுன்டேஸன் ஒழுங்கு செய்துள்ள நட்புறவு கால்பந்தாட்ட போட்டியொன்று எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மருதமுனை மஸுர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அண்மையில் கொழும்பில் நடாத்திய டிவிஸன் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்ததை எதிர்தது மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

இப்போட்டிக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் பிரதம அதிதியாக கலந்து  சிறப்பிக்கவுள்ளார்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .