2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான தடகள போட்டிகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலி கிழக்கு கோப்பாய பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை 03 ஆம் திகதி நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகவும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.அண்ணாத்துரை,  பிரதி திட்டப் பணிப்பாளர் ச.குகதாஸ் சிறப்பு விருந்தினர்களாகவும்,  வட மாகாண விளையாட்டுத் திணைக்கள் பிரதிப் பணிப்பாளர் ரூபசிங்கம் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X