2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் யாழ். மாவட்ட அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட அணியும் வவுனியா மாவட்ட அணியும் மோதிக்கொண்டன. இரு அணிகளும் ஆரம்பத்தில் சற்று பலமான நிலையில் விளையாடியபோதிலும், தொடர்ந்து யாழ். மாவட்ட அணி முன்னணியில் திகழ்ந்தது.

நான்கு பாதி ஆட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் கால்பாதி ஆட்டத்தில் யாழ். மாவட்ட அணி 09க்கு 03 புள்ளிகள் என்ற அடிப்படையிலும் இரண்டாம் கால்பாதி ஆட்டத்தில் 12க்கு 02 என்ற நிலையிலும் மூன்றாம் கால்பாதி ஆட்டத்தில் 09க்கு 01 என்ற நிலையிலும் இறுதி கால்பாதி ஆட்டத்தில் 15க்கு 05 என்ற நிலையிலும் யாழ். மாவட்ட அணி வெற்றி பெற்றது. ஆட்ட நிறைவில் யாழ். மாவட்ட அணி 45க்கு 12 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று வடமாகாண சம்பியனாக தெரிவானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .