2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிரிக்கட், கூடை பந்தாட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையிலிருந்து 2010, 2011ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற அகில இலங்கை கிரிகட் மற்றும் கூடை பந்தாட்டம் போட்டிகளில்; பங்குப்பற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வர்ன பதக்கங்கள் வழங்கும் வர்ன இரவு இன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை கேற்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகான சபை உறுப்பினரும் மத்திய மாகாண கிரிகட் சங்கத்தின் தலைவருமான திலின பண்டார தென்னகோன், மத்தய மாகாண சபை உறுப்பினர் எம்.ஆர்.ரிஸ்வி, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சாபீ, மத்திய மாகான கிரகட் பயிற்றிவிப்பாளர் சுனில் பெர்னாந்து உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் ஆண்டு 17 வாதுக்கு கீழ்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிகட் போட்டியில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம்  இடத்தினைப் பெற்ற வீரர்களுக்கும், கூடைப்பந்தாட்டத்தின் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் இதன்போது வர்ன பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .