2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணி வெற்றி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகம் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே இரண்டாவது ஆண்டாக  நடத்திய அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்திய ஓவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணி அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்தை வென்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கல்வியங்காடு ஜீ.பி.எஸ்.விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணியும் யாழ். மாவட்ட செயலக அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய சங்கானை பிரதேச செயலக அணி 12.2  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றது.

53 ஓட்டம் என்ற இலகு ஓட்டத்துடன் களமிறங்கிய யாழ். செயலக விளையாட்டு அணி முன்னிலை துடுப்பாட்ட வீரர்கள் ஐவர் 10 ஓட்டங்களுக்குள் விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில் 14.5 ஓவர்கள் வரை துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் உரிய இலக்கை அடைய முடியாத நிலையில் 47 ஓட்டங்களுக்குள் அனைவரும் ஆட்டம் இழந்தார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .