2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கால்பந்தாட்டத்தில் பாடும் மீன் அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் குருநகர் பாடும் மீன் அணி வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவ கழகங்களின் விசேட எட்டு அணிகளுக்கிடையில் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தியது. இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியிலேயே குருநகர் பாடும் மீன் அணி வென்றது.

இறுதிப் போட்டியில் குருநகர் பாடும் மீன் அணியும் ஊரெழு றோயல்ஸ் அணியும் மோதின. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பாடும் மீன் அணி முதல் கோலை அடித்தது. இந்நிலையில், முதல் பாதி ஆட்டம் 1 : 0 என்ற கணக்கில் முடிவடைந்தது. 

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஊரெழு றோயல்ஸ் அணி சுதாகரித்து ஆடியது. எனினும் அவ்வணி கோல் எதனையும் போட முடியாமல் போனது. இத்தருணத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாடும் மீன் அணி இரண்டாவது கோலையும் போட்டது. இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பாடும் மீன் அணி 2 : 0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .