2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியில் 22ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்றுடன் நிறைவு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான 22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் தி.மு.ஜயரட்னவை இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் நிஸாந்த ரணசிங்க  ஆகியோர் அழைத்து வந்தனர்.

இதன் பின்னர் விளையாட்டு மைதானத்தில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. 22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பிரதமர் தி.மு.ஜயரட்ன உட்பட அதிதிகள் பரிசில்களை வழங்கிவைத்தனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .