2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

37ஆவது கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு 14 பதக்கங்கள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 37ஆவது கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றியவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தையும் 2 வெள்ளிப்பதக்கங்களையும் 11 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.ஆர்.எம்.இக்பால் தெரிவித்தார்.

இம்மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இக்கராத்தே சுற்றுப்போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் 9 மாகாணங்களைச்  சேர்ந்த ஏராளமான வீரரர்கள் பங்குபற்றியதாகவும் அவர் கூறினார்.

கராத்தே சம்மேளனத் தலைவர் டபிள்யூ.ஜெயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் முதலாவது ஜப்பான் தூதுவர் கிண்ணத்தை மேல்மாகாண அணி சுவீகரித்துக்கொண்டது.  சுற்றுத்தொடரின் முதலாவது இடத்தையும் மேல்மாகாணம் பெற்றுக்கொண்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .