2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆண்களில் யாழ். மத்தி; பெண்களில் யாழ். பல்கலைக்கழகம் சம்பியனாகின

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 28 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாவட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில், ஆண்களில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும், பெண்களில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சம்பியனாகின.  

மாவட்ட மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், கடந்த மாதம் 26, 27ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.   

இதில், ஆண்கள் பிரிவில், 107 புள்ளிகளைப் பெற்று, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. 76 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், 41 புள்ளிகளைப் பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தையும், 39 புள்ளிகளைப் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றன. 38 புள்ளிகளைப் பெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி ஐந்தாமிடத்தையும், 26 புள்ளிகளைப் பெற்ற மகாஜனாக் கல்லூரி ஆறாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.   

பெண்கள் பிரிவில், 57 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், 43 புள்ளிகளைப் பெற்ற மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடத்தையும், 32 புள்ளிகளைப் பெற்ற உடுவில் மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன. 30 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி நான்காமிடத்தையும்  25 புள்ளிகளைப் பெற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஐந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .