2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் அண்ணாவிமார் மாநாடு

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அண்ணாவிமார் மாநாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் டி.வாசுதேவன் மண்மனை வடக்கு பிரதேச செயலளார் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 66 அண்ணாவிமார் கௌரவிக்கப்பட்டதுடன் 'அண்ணாவியம'; எனும் சிறப்பு நூலும் இதன்போது வெளியி;டப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .