2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஓவிய பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான ஓவிய பயிற்சிப்பட்டறை ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பிரிவினால் நடத்தப்பட்ட இந்த ஓவிய பயிற்சிப்பட்டறையில் 40 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா, கலாசார உத்தியோகத்தர் எஸ்.சோமசுந்தரம், கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷஷெய்க் ஏ.எல்.முசாதிக், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீ கமலச்சந்திரன், ஆரையம்பதி மகா வித்தியாலய அதிபர் தங்கவடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X